ஸம: ஶத்1ரௌ ச1 மித்1ரே ச11தா2 மானாப1மானயோ: |

ஶீதோ1ஷ்ணஸுக2து3: கே2ஷு ஸம: ஸங்க3விவர்ஜித1: ||18||
து1ல்யநிந்தா3ஸ்து1தி1ர்மௌனீ ஸந்து1ஷ்டோ1 யேன கே1னசி1த்1 |

அனிகே1த: ஸ்தி2ரமதி1ர்ப4க்1தி1மான்மே ப்1ரியோ நர: ||
19 ||

ஸமஹ-—ஒரேபோல்; ஶத்ரௌ--—ஒரு எதிரிக்கு; ச--—மற்றும்; மித்ரே--—ஒரு நண்பருக்கு; ச ததா--—அத்துடன்; மான-அபமானயோஹோ--—கௌரவத்திலும் அவமதிப்பிலும்; ஶீத-உஷ்ண--—குளிர் மற்றும் வெப்பத்தில்; ஸுக--துஹ்கேஷு—--மகிழ்ச்சியிலும் துக்கத்திலும்; ஸமஹ--—சமமான; ஸங்க-விவர்ஜிதஹ--—அனைத்து சாதகமற்ற தொடர்புகளிலிருந்தும் விடுபட்டு; துல்ய--—ஒரேசீராக பாவித்து; நிந்தா-ஸ்துதி---தூற்றலையும் மற்றும் போற்றலையும்; மௌனீ----அமைதியான சிந்தனையுடன்; ஸந்துஷ்டஹ----மனநிறைவுடன்; யேன கேனசித்--—எதையும் கொண்டு; அனிகேதஹ--—வசிக்கும் இடத்தின் மீது பற்று இல்லாமல்; ஸ்திர—--உறுதியாக நிலையான; மதிஹி----புத்தியுடன்; பக்தி-மான்—--பக்தி நிறைந்தவர்; மே--—எனக்கு; ப்ரியஹ--—மிகவும் பிரியமான; நரஹ--—-ஒரு நபர்

అనువాదం

BG 12.18-19: அவர்கள், நண்பர் மற்றும் எதிரி இருவரிடம் சமநிலையில் இருப்பவர்கள்; மரியாதை மற்றும் அவமரியாதை, குளிர் மற்றும் வெப்பம், மகிழ்ச்சி மற்றும் துக்கம் ஆகியவற்றில் சமமாக இருப்பவர்கள்; சாதகமற்ற தொடர்புகளிலிருந்து விடுபட்டவர்கள்; புகழ்ச்சி மற்றும் பழிச் சொற்களை ஒரே மாதிரியாக ஏற்றுக் கொள்பவர்கள், அமைதியான சிந்தனையில் ஈடுபடுபவர்கள், வசிப்பிடத்தின் மீது பற்று இல்லாதவர்கள், கிடைக்கப்பெற்றதில் திருப்தி அடைபவர்கள், என்னில் புத்தியை உறுதியாக நிலைத்து இருப்பவர்கள், என்னிடத்தில் பக்தி மிக்கவர்கள். அத்தகையவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்

వ్యాఖ్యానం

ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு மேலும் பத்து குணங்களை விவரிக்கிறார்.

நண்பர் மற்றும் எதிரி இருவரிடம் சமநிலையில் இருப்பவர்கள்: பக்தர்கள் அனைவரிடமும் நேர்மறையாகச் செயல்படுகிறார்கள் மற்றும் பகை மற்றும் நட்பின் உணர்வுகளால் பாதிக்கப்படுவதில்லை. இதைப் பற்றி பக்த பிரஹலாத் பற்றி ஒரு அழகான கதை உள்ளது:

ஒருமுறை, அவரது மகன் விரோசன், தனது குருவின் மகன் ஸுதன்வாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விரோசனன், ‘நான் ஒரு அரசனின் மகன் என்பதால் உன்னைவிட உயர்ந்தவன்’ என்றான்.

ஸுதன்வா, ‘நான் ஒரு ரிஷியின் மகன் என்பதால் நான் உயர்ந்தவன்’ என்று கூறினான். அவர்கள் இருவரும் இளமைப் பருவத்தினர் ஆக இருந்ததால் பந்தயம் கட்ட தூண்ட பட்டார்கள். 'இருவரில் சிறந்தவர் என்று அறிவிக்கப்பட்டவர் வாழ்வார், மற்றவர் உயிரைக் கொடுக்க வேண்டும்.' என்று இருவரும் ஒப்புக்கொண்டனர். விரோச்சனா கேட்டான்- "இதை யார் தீர்மானிப்பது?" ஸுதன்வா சொன்னான்- "அதை உன் தந்தை பிரஹலாதன் முடிவு செய்வார்."

விரோசனன், ‘அப்படியா! ஆனால் அவர் பாரபட்சமாக நடந்து கொண்டதாக நீ புகார் செய்வாய்.என்று கூறினான்

'இல்லை, என் தந்தை, ரிஷி அங்கீரா, உன் தந்தை பிரஹலாத் மிகவும் நேர்மையானவர், நண்பர் மற்றும் எதிரி என்று ஒருபோதும் வேறுபாடு காட்ட மாட்டார் என்று கூறினார்.

சிறுவர்கள் இருவரும் பிரஹலாதனிடம் சென்றனர். விரோசனன் கேட்டான்- "தந்தையே, நான் சிறந்தவனா அல்லது ஸுதன்வா சிறந்தவனா?"

பிரஹலாதன் கேட்டார் - "இந்தக் கேள்வி எப்படி எழுந்தது?"

அதற்கு விரோசனன், 'அப்பா, "உயர்ந்தவனாக அறிவிக்கப்பட்டவன் வாழ்வான், மற்றவன் உயிர் துறக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளோம் அப்பா." என்று பதிலளித்தான்

பிரஹலாதன் சிரித்துக்கொண்டே, 'உன் நண்பன், ஸுதன்வா, உன் தந்தையின் குருவின் மகன் என்பதால், அவன் உயர்ந்தவன்' என்றான். தன் வேலையாட்களுக்கு, 'தூக்கு மேடைக்குக் கொண்டுபோய் தூக்கிலிடு' என்று கட்டளையிட்டார்

அந்த நேரத்தில் ஸுதன்வா தலையாட்டி. ‘பொறுங்கள்!’ என்று பிரஹலாதனிடம், ‘எனக்கு இரண்டாவது கேள்வி இருக்கிறது. நான் உயர்ந்தவனா அல்லது நீ உயர்ந்தவனா ' என்று கேட்டான்

அதற்கு பிரஹலாதன், ‘நான் அசுரர்களின் குலத்தில் பிறந்தவன், நீ என் குருவான ரிஷியின் மகனாயிற்றே. நீ உயர்ந்தவன்.’

ஸுதன்வா மீண்டும் கேட்டான், ‘அப்படியானால், என் அறிவுரைக்குக் கீழ்ப்படிவீர்களா?’

‘ஆம், நிச்சயமாக,’ பிரஹலாதன் பதிலளித்தார்.

‘சரி, விரோசனை விட்டுவிடுங்கள்,’ என்றான் ஸுதன்வா.

பிரஹலாதன், ‘தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொன்ன அதே பாணியில், ‘அவரை விட்டுவிடுங்கள்’ என்று தன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

மரியாதை மற்றும் அவமரியாதையில் சமநிலை: ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் குறிப்பிடுகிறார், பக்தர்கள் மரியாதை மற்றும் அவமதிப்புக்கு கவனம் செலுத்துவதில்லை. ஒரு நபர் தகாத உறவில் ஈடுபடத் தொடங்கும் போது, ​​​​மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று அவன் அல்லது அவள் கவனமாக இருப்பர், ஆனால் அந்த உறவு ஆழமாக மாறும்போது, ​​​​அந்த நபர் இனி அது கொண்டு வரும் அவப்பெயரைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதேபோல், பக்தனின் இதயத்திலும் தெய்வீக அன்பின் சுடர் மிகவும் பிரகாசமாக எரிகிறது, உலக மரியாதை மற்றும் அவமதிப்பு இனி எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை.

குளிர். வெப்பம் .மகிழ்ச்சி மற்றும் துக்கம் எல்லாவற்றிலும் சமநிலை: பக்தர்கள் சாதகமான மற்றும் சாதகமற்ற சூழ்நிலைகளில் சமநிலையில் உள்ளனர். இவை எதுவும் நிரந்தரமானவை அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இரவும் பகலும் போல வந்து செல்கிறார்கள், எனவே அவர்கள் கடவுளின் எண்ணங்களை விலக்கி, அவற்றில் ஒன்றில் கவனம் செலுத்துவது மதிப்புக்குரியதாக கருதுவதில்லை.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவம் முனிவர்களின் இயல்பை விளக்குகிறது. வயதான காலத்தில் அவருக்கு தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மக்கள் அவரை காளி அன்னையிடம் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அவர், ‘அன்னை காளி மீதுள்ள அன்பில் என் மனம் லயிக்கிறது. நான் ஏன் அவளிடமிருந்து அதை எடுத்து இந்த அழுக்கு உடல் புற்றுநோய் பற்றி சிந்திப்பதில் மனதை ஈடுபடுத்த வேண்டும்? கடவுள் என்ன நினைத்தாரோ அது நடக்கட்டும்’ என்று கூறினார.

சாதகமற்ற தொடர்பில் இருந்து விடுபடுதல்: நபர்களுடன் அல்லது பொருள்களுடன் தொடர்புகொள்வது ஸங் க3ம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு வகையான தொடர்புகள் (ஸங்க3ங்கள்) உள்ளன. நம் மனதை உலகிற்கு அழைத்துச் செல்லும் ஸங்கம் கு1ஸங் (ஸாதகமற்ற ஸங்கம்) மற்றும் நம் மனதை உலகத்திலிருந்து விலக்கி கடவுளை நோக்கி அழைத்துச் செல்வது ஸத்1ஸங்க3ம் (ஸாதகமான சங்கம்) என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் உலக எண்ணங்களை விரும்பாததால், இயற்கையாகவே ஸாதகமற்ற ஸங்கங்களை தவிர்த்து ஸத்1ஸங்க3த்தில் ஈடுபடுகிறார்கள்.

பாராட்டு மற்றும் பழியை ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்: வெளிப்புறமாக உந்துதல் உள்ளவர்களுக்கு, மற்றவர்களின் பாராட்டு மற்றும் நிராகரிப்பு மிகவும் முக்கியமானது. இருப்பினும், பக்தர்கள் தங்களுக்குள்ளேயே அவர்கள் மதிக்கும் நற்பண்புகளால் உந்துதல் பெறுகிறார்கள். எனவே, மற்றவர்களின் பாராட்டுகளோ, கண்டனங்களோ அவர்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

அமைதியான சிந்தனைக்கு உட்படுதல்: காகங்கள் மற்றும் அன்னப்பறவை ஆகியவை முற்றிலும் நேர்மாறானவை. காகங்கள் குப்பைக் குவியல்களுக்கு இழுக்கப்படும் போது, ​​அமைதியான ஏரிகளால் கம்பீரமான அன்னப்பறவைகள் ஈர்க்கப்படுகின்றன. அதேபோன்று, உலக மக்களின் மனம் பொருள் சார்ந்த விஷயங்களைப் பற்றி உரையாடுவதில் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்கிறது. ஆனால் புனிதமான பக்தர்கள் தூய்மையான மனதைக் கொண்டுள்ளனர், இதனால் உலகப் பேச்சுகள் குப்பைக் குவியலாக அவர்களுக்கு அசுவாரசியமாகத் தெரிகிறது. இதற்கு அவர்கள் உரையாடுவது இல்லை என்று அர்த்தமாகாது. ஏரிகளுக்கு இழுக்கப்படும் அன்னம் போல, அவர்களின் மனம் கடவுளின் பெயர்கள், வடிவங்கள், பொழுதுபோக்குகள் , நற்பண்புகள், இருப்பிடங்கள், கூட்டாளிகள் மற்றும் மகிமைகள் போன்ற போன்ற விஷயங்களில் ஈர்க்கப்படுகிறது.

கிடைக்கப்பெற்றவையில் மகிழ்ச்சி அடைவது: பக்தர்களின் தேவைகள் உடலைப் பராமரிப்பதற்கான அடிப்படைத் தேவைகளாக சுருங்குகிறது. துறவி கபீர் இதை தனது புகழ்பெற்ற ஈரடியில் வெளிப்படுத்துகிறார்:

மாலிக்1 இத1னா தீ 3ஜியே, ஜமே கு டு1ம்ப3 ஸமாய

மே பீ 4 பூ4கா1 ந ரஹுன், ஸாது4 ந பூ4கா2 ஜாய

‘ஓ கடவுளே, என் குடும்பத்தினரின் உடல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், என் வீட்டு வாசலுக்கு வரும் ஸாதுக்களுக்கு அன்னதானம் செய்வதற்கும் போதுமான அளவு எனக்கு கொடுங்கள்.

வசிப்பிடத்தில் பற்றற்று இருப்பது: எந்த ஒரு பூமிக்குரிய வீடும் ஆன்மாவுக்கு நிரந்தர வசிப்பிடமாக இருக்க முடியாது, ஏனென்றால் அது மரணத்தின் போது நம்முடன் செல்லாது. மொகல் பேரரசர் அக்பர், தனது தலைநகரான ஃபதேபூர் சிக்ரியை கட்டியபோது, ​​அவர் பிரதான வாயிலில் பின்வரும் கல்வெட்டை வைத்தார்: 'உலகம் ஒரு பாலம்; அதைக் கடக்க வேண்டும், ஆனால் அதன் மீது வீட்டைக் கட்ட வேண்டாம்.’ அதே பாணியில், ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மகராஜ் கூறுகிறார்:

ஜக3 மே ரஹோ ஐஸே கோவிந்த3 ராதே4,

4ர்மஶாலா மே யாத்1ரி ரஹே ஜ்யோன் ப3தா1 தே3 (ராதா4 கோவிந்த3 கீத்1)

‘ஒரு வழிப்போக்கன் சத்திரத்தில் வாழ்வது போல இவ்வுலகில் வாழுங்கள் (அதை அடுத்த நாள் காலை காலி செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்)’ இந்த கூற்றின் உண்மையை உணர்ந்த பக்தர்கள் தங்கள் வீட்டை தற்காலிக வசிப்பிடமாக மட்டுமே பார்க்கிறார்கள்

புத்தி என்னில் உறுதியாக உள்ளது: படைப்பிலும், அவருடனான தங்கள் நித்திய உறவிலும் கடவுளின் நிலையின் மேலாதிக்கம் குறித்து பக்தர்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். இறைவனிடம் அன்புடன் சரணடைந்தால், கடவுளின் அருளால் உயர்ந்த மெய்ம்மையை அடைவார்கள் என்ற நம்பிக்கையிலும் அவர்கள் உறுதியாக உள்ளனர். எனவே, அவர்கள் அனைத்து ஈர்ப்புகளிலிருந்து விடுபட்டு ஒரே பாதையில் செல்கிறார்கள்..

அத்தகைய உறுதியான பக்தர்களை ஸ்ரீ கிருஷ்ணர் தனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று அறிவிக்கிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
12. பக்தி யோகம்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency